என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வீடுகள் இடிந்து விழுந்தது"
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த சில தினங்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இரவு பகலாக இடைவிடாமல் பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு மஞ்சூர் அருகே உள்ள எமரால்டு இந்திராநகர் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.
இந்த மழையில் அப்பகுதியை சேர்ந்த அருணாச்சலம், காளிமுத்து மற்றும் கோவிந்தம்மாள் ஆகியோரின் வீடுகளின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் குந்தா தாசில்தார் ஆனந்தி மற்றும் வருவாய்துறையினர் இந்திராநகர் பகுதிக்கு சென்று மழையால் இடிந்த வீடுகளை பார்வையிட்டனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய அதிகாரிகள் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதேபோல் எடக்காடு பகுதியில் மின்வாரிய அலுவலகம் அருகே சாலையோரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் மழையுடன் வீசிய சூறாவளி காற்றால் கிண்ணக் கொரை, கோரகுந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்து விழுந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்